Don't Miss!
- News சிஏஏவுக்கு எதிரான 200 வழக்குகளை இன்று ஒன்றாக விசாரிக்கும் உச்சநீதிமன்றம்- மத்திய அரசுக்கு நெருக்கடி?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
சர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி
Recommended Video
சென்னை: சர்கார் பட போஸ்டர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் போஸ்டரில் தளபதி சிகரெட் பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். அந்த போஸ்டரை பார்த்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் போஸ்டர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து படத் தயாரிப்பு தரப்பில் அந்த போஸ்டரை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்கள்.
இந்த பிரச்சனை குறித்து முருகதாஸோ, விஜய்யோ இதுவரை எதுவும் பேசவில்லை. நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தான் விஜய்க்கு ஆதரவாக பேட்டி அளித்தார். முதலில் புகையிலையை தடை செய்யட்டும் என்றார்.
இந்நிலையில் சர்கார் போஸ்டர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்காக நடிகர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்கு மாறாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது தானே என்றார்.