Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
சர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி
Recommended Video
சென்னை: சர்கார் பட போஸ்டர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் போஸ்டரில் தளபதி சிகரெட் பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். அந்த போஸ்டரை பார்த்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் போஸ்டர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து படத் தயாரிப்பு தரப்பில் அந்த போஸ்டரை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்கள்.
இந்த பிரச்சனை குறித்து முருகதாஸோ, விஜய்யோ இதுவரை எதுவும் பேசவில்லை. நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தான் விஜய்க்கு ஆதரவாக பேட்டி அளித்தார். முதலில் புகையிலையை தடை செய்யட்டும் என்றார்.
இந்நிலையில் சர்கார் போஸ்டர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்காக நடிகர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்கு மாறாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது தானே என்றார்.