Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சர்கார் படத்துக்காக கதை திருடினாரா முருகதாஸ்?: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை
Recommended Video
சென்னை: சர்கார் திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என புகார் எழுந்துள்ளது.
சர்கார் திரைப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை தான். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரட் பிடிப்பது போன்ற புகைப்படம் புயலை கிளப்பியது.
இப்போது இசை வெளியீட்டு விழா முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், கதை திருடப்பட்டது என புகார் எழுந்துள்ளது.
ஏஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படம், என்னுடையது என உதவி இயக்குனர் வருண் தேவராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார். கதையை எழுதி செங்கோல் என்ற பெயரில் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதை திருடி ஏஆர்.முருகதாஸ் சர்கார் என்ற பெயரில் படமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு கதைகளுமே 100 சதவிகிதம் பொருந்திப்போவதாக சொல்லப்படுகிறது. அதனால் சர்கார் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
இதற்கு முன்பு முருகதாஸ் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் கதையும் திருடி எடுக்கப்பட்டது என புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.