Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...!
சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் சர்கார். அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இருதினங்களுக்கு முன்பு வெளியான சர்கார் படத்தின் டீசர் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால், விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். ஆனால் இந்த படத்திற்கு வேறொரு ரூபத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
[மேலும் 4 பெண்கள் புகார், இருக்கு அர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்]
வருண் ராஜேந்திரனின் செங்கோல்
வருண் ராஜேந்திரன் என்பவர் தான் எழுதிய 'செங்கோல்' கதையை திருடி தான் சர்கார் படம் எடுத்துள்ளதாக எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனால் இதனை ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக மறுத்தார்.
கதை திருட்டு உறுதி
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலானக் குழு விரிவான விசாரணை நடத்தியது. இதில் செங்கோல் கதையின் 95 சதவீதம் காட்சிகள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
கதையின் உரிமை
2007ம் ஆண்டு வருண் ராஜேந்திரன் இந்த கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் அந்த கதை அவருக்கு தான் உரிமையானது என எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்காருக்கு சிக்கல்
சர்கார் படம் வெளிவர இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கதை திருடப்பட்டது உறுதியாகியுள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. கத்தி திரைப்படத்திற்கும் அதேபோன்ற குற்றச்சாட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது கூறப்பட்டது. ஆனால் அதை அவர் நீதிமன்றத்தில் பொய் என நிரூபித்தார்.
நீதிமன்றம் செல்ல வாய்ப்பு
இந்நிலையில் சர்கார் படத்திற்கும் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரமும் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், வேறு வழிகள் என்ன என்பது குறித்தும் படக்குழு ஆலோசித்து வருகிறது.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!