Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...!
சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் சர்கார். அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இருதினங்களுக்கு முன்பு வெளியான சர்கார் படத்தின் டீசர் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால், விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். ஆனால் இந்த படத்திற்கு வேறொரு ரூபத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
[மேலும் 4 பெண்கள் புகார், இருக்கு அர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்]
வருண் ராஜேந்திரனின் செங்கோல்
வருண் ராஜேந்திரன் என்பவர் தான் எழுதிய 'செங்கோல்' கதையை திருடி தான் சர்கார் படம் எடுத்துள்ளதாக எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனால் இதனை ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக மறுத்தார்.
கதை திருட்டு உறுதி
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலானக் குழு விரிவான விசாரணை நடத்தியது. இதில் செங்கோல் கதையின் 95 சதவீதம் காட்சிகள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
கதையின் உரிமை
2007ம் ஆண்டு வருண் ராஜேந்திரன் இந்த கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் அந்த கதை அவருக்கு தான் உரிமையானது என எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்காருக்கு சிக்கல்
சர்கார் படம் வெளிவர இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கதை திருடப்பட்டது உறுதியாகியுள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. கத்தி திரைப்படத்திற்கும் அதேபோன்ற குற்றச்சாட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது கூறப்பட்டது. ஆனால் அதை அவர் நீதிமன்றத்தில் பொய் என நிரூபித்தார்.
நீதிமன்றம் செல்ல வாய்ப்பு
இந்நிலையில் சர்கார் படத்திற்கும் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரமும் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், வேறு வழிகள் என்ன என்பது குறித்தும் படக்குழு ஆலோசித்து வருகிறது.