Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகை சரோஜாதேவி ரூ 5 லட்சம் நன்கொடை
சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சரோஜாதேவி ரூ 5 லட்சத்தை தமிழக வெள்ள நிவாரண நிதியாக அளித்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது 78 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவர் சென்னைக்கு வந்து நடிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்தார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், சிவகுமார், மனோபாலா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சரோஜாதேவியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பூங்கொத்து கொடுத்து நடிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர். மேலும் கேக் வெட்டியும் அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ 5 லட்சத்தை நன்கொடையாக சரோஜாதேவி வழங்கினார். இதனை நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக் கொண்டார்.
நடிகர் சங்கம் மூலம் சேருகின்ற இந்தத் தொகையானது முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?