சார்பட்டா பரம்பரை 2 ஆரம்பிக்க ஏன் தாமதம்?.. எல்லாம் அந்தப் படம்தான் காரணம்.. உண்மை சொன்ன கலையரசன்

சென்னை: பா.இரஞ்சித் இயக்கம் என்றாலே அந்தப் படத்தை பார்க்க எல்லோரும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இத்தனை வருடங்களாக ஒடுக்கப்பட்டவர்களின் குரல் சினிமாவில் ஒலிக்கவே இல்லை. இரஞ்சித் வந்த பிறகுதான் அதனை அவர் மாற்றி வைத்தார். அதன் பலனாக பல படங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக வர ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் இரஞ்சித் தமிழ் சினிமாவின் முன்னத்தி ஏர்தான். அடுத்ததாக அவர் சார்பட்டா பரம்பரை 2 படத்தை இயக்கவிருக்கிறார்.

இயக்குநர் பா.இரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை,நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் கடைசி இரண்டு படங்கள் தவிர்த்து மற்ற அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. முக்கியமாக தன்னுடைய அத்தனை படங்களிலுமே ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலித்தார். அதிலும் ரஜினியை வைத்து தலித்திய விஷயங்கள் பேசியது அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றன.

Sarpatta Parambarai 2 Is a Prequel Shooting May Begin in July Reveals Kalaiyarasan
Photo Credit:

சார்பட்டா பரம்பரை இரஞ்சித்: அவர் இயக்கிய முக்கியமான படங்களில் ஒன்று சார்பட்டா பரம்பரை. ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் ஓடிடியில் நேரடியாக கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. வடசென்னை மக்கள் வாழ்வியலுக்குள் பாக்ஸிங் எப்படி கலந்திருக்கிறது என்பதை ஏற்கனவே பூலோகம் படத்தில் ஓரளவுக்கு காட்டியிருந்தார். இதில் ரொம்பவே டீட்டெய்லோடு காட்டியிருந்தார் இரஞ்சித்.

Also Read
விஜய் ஆண்டனியின் ரொமான்ஸுக்கு 100 மார்க்.. பிளாஸ்ட் செய்த லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா
விஜய் ஆண்டனியின் ரொமான்ஸுக்கு 100 மார்க்.. பிளாஸ்ட் செய்த லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா

மெகா ப்ளாக் பஸ்டர் ஆன படம்: இதன் காரணமாக அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கொரோனா காலகட்டம் என்பதால் அப்படம் ஓடிடியில் வந்தது. ஒருவேளை தியேட்டர்களில் மட்டும் ரிலீஸாகியிருந்தால் கண்டிப்பாக அப்படம் நூறு கோடி ரூபாயை வசூலித்திருக்கும் என்பது அனைவரது கணிப்பு. படத்தில் க்ளாஸ், மாஸ், அரசியல் கருத்துக்கள் என பல விஷயங்களை அடுக்கியிருப்பார் இரஞ்சித். தியேட்டரில் வெளியாகாமல் போனது கண்டிப்பாக கெடுவாய்ப்புதான்.

சார்பட்டா பரம்பரை 2: இப்போது அவர் வேட்டுவம் படத்தை இயக்கியிருக்கிறார். அதன் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இதனை முடித்துவிட்டு சார்பட்டா பரம்பரை 2 படத்தை இயக்கவிருக்கிறார் இரஞ்சித். முதல் பாகம் போன்று இல்லாமல் இது தியேட்டரில்தான் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் அறிவிப்பு வந்தாலும் அதன் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் அந்தப் படத்தின் நிலை குறித்து நடிகர் கலையரசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கலையரசன் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "சார்பட்டா பரம்பரை 2 படத்தின் ஷூட்டிங்கை கடந்த வருட இறுதியிலேயே தொடங்கலாம் என்றுதான் இருந்தோம். ஆனால் வேட்டுவம் காரணமாக அது தாமதமானது. மே மாதத்தில் ஒத்திகைகள் தொடங்கின. ஜூன் மாதத்தில் ஷூட்டிங்கை தொடங்குவதற்கு முயற்சி செய்தோம். ஆனால் வேட்டுமவம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் இன்னும் முடியவில்லை. சார்பட்டார் 2 படத்தின் கதை; முதல் பாகத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதாக இருக்கும். எனவே படத்துக்கு ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் முக்கியம். அநேகமாக ஜூலை மாதத்தில் ஷூட்டிங்கை தொடங்கலாம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X