Don't Miss!
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
முதல் நாள்ல இருந்து இப்போ வர தனுசுடன் அற்புதமான பயனம்- சசிகாந்த்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயகத்ததில் உருவாகி வரும் படம் தான் தனுஷ் 40.
இந்த படத்தின் அதிகாரபூர்வ தலைப்பை படக்குழு இனிமேல் தான் வெளியிட உள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வருகிறார். கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் அதிகமாக நடந்து வந்த லண்டன் ஷெடியூல் முடிந்து சென்னை வந்த படக்குழு இங்கு உள்ள படப்பிடிப்பையும் முடித்து உள்ளது .
மேலும் மொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு படப்பிடிப்பின் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறது. தற்போது படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் படத்தை பற்றியும் நடிகர் தனுசை பற்றியும் ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
இதில் 'டி'யின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது. முதல் நாள் முதல் தற்போது வரையிலும் ஒரு அற்புதமான பயனம் ஏற்பட்டுள்ளது. உங்களின் தனித்துவம் மிக்க படத்திற்கான உழைப்பு அசாத்தியமானது. இந்த வாய்ப்பை தந்ததற்கும் நட்புக்கும் நன்றி என்று நடிகர் தனுசை பற்றி கூறியிருக்கிறார் சசிகாந்த் .
ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் ஒரு தரமான தயாரிப்பாளர், அவர் பல நல்ல படங்களை தயாரித்துள்ளார். 2010ல் தமிழ் படம் மூலம் தயாரிப்பை துவங்கிய ஒய் நாட் ஸ்டூடியோஸ் பின் வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவிய தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ,தமிழ் படம் 2,கேம் ஓவர் படங்கள் வரை தயாரித்து உள்ளனர் .
தயாரிப்பு ரீதியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது ஒரு சின்ன தவறு படத்தை கவிழ்த்து விடும் அதனால் மிகுந்த கவனத்தில் படத்தை தயாரித்து வருகிறார் சசிகாந்த்.
பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்... பிரபல ஹீரோ மீது நடிகை ஶ்ரீரெட்டி மீண்டும் அட்டாக்
சசிகாந்த் காவியதலைவன் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் சிறிய பட்ஜட்டில் தயாரித்து இருந்தார் இருந்தும் படம் வெளியான தேதி சரியில்லாததால் படம் தோல்வி அடைந்தது. இதனால் அந்த படத்திற்கு பின் படங்களை மிக கவனமான முறையில் தயாரிக்கிறார். தற்போது தனுஷ் 40,பின் யோகி பாபுவின் 'மண்டேலா' ,சமுத்திரகனியின் 'ஆலே' படங்களை தயாரித்து வருகிறார் சசிகாந்த்.