Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதல் நாள்ல இருந்து இப்போ வர தனுசுடன் அற்புதமான பயனம்- சசிகாந்த்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயகத்ததில் உருவாகி வரும் படம் தான் தனுஷ் 40.
இந்த படத்தின் அதிகாரபூர்வ தலைப்பை படக்குழு இனிமேல் தான் வெளியிட உள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வருகிறார். கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் அதிகமாக நடந்து வந்த லண்டன் ஷெடியூல் முடிந்து சென்னை வந்த படக்குழு இங்கு உள்ள படப்பிடிப்பையும் முடித்து உள்ளது .
மேலும் மொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு படப்பிடிப்பின் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறது. தற்போது படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் படத்தை பற்றியும் நடிகர் தனுசை பற்றியும் ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
இதில் 'டி'யின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது. முதல் நாள் முதல் தற்போது வரையிலும் ஒரு அற்புதமான பயனம் ஏற்பட்டுள்ளது. உங்களின் தனித்துவம் மிக்க படத்திற்கான உழைப்பு அசாத்தியமானது. இந்த வாய்ப்பை தந்ததற்கும் நட்புக்கும் நன்றி என்று நடிகர் தனுசை பற்றி கூறியிருக்கிறார் சசிகாந்த் .
ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் ஒரு தரமான தயாரிப்பாளர், அவர் பல நல்ல படங்களை தயாரித்துள்ளார். 2010ல் தமிழ் படம் மூலம் தயாரிப்பை துவங்கிய ஒய் நாட் ஸ்டூடியோஸ் பின் வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவிய தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ,தமிழ் படம் 2,கேம் ஓவர் படங்கள் வரை தயாரித்து உள்ளனர் .
தயாரிப்பு ரீதியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது ஒரு சின்ன தவறு படத்தை கவிழ்த்து விடும் அதனால் மிகுந்த கவனத்தில் படத்தை தயாரித்து வருகிறார் சசிகாந்த்.
பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்... பிரபல ஹீரோ மீது நடிகை ஶ்ரீரெட்டி மீண்டும் அட்டாக்
சசிகாந்த் காவியதலைவன் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் சிறிய பட்ஜட்டில் தயாரித்து இருந்தார் இருந்தும் படம் வெளியான தேதி சரியில்லாததால் படம் தோல்வி அடைந்தது. இதனால் அந்த படத்திற்கு பின் படங்களை மிக கவனமான முறையில் தயாரிக்கிறார். தற்போது தனுஷ் 40,பின் யோகி பாபுவின் 'மண்டேலா' ,சமுத்திரகனியின் 'ஆலே' படங்களை தயாரித்து வருகிறார் சசிகாந்த்.