Don't Miss!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மறுபடியும் தலையை ஆட்ட வருகிறார் ஜெய்.... மீண்டும் கை கோர்க்கும் "சுப்ரமணியபுரம் கேங்"!
சென்னை: சசிகுமார் இயக்கி நடித்திருந்த படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் ஜெய் மற்றும் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுவாதி நாயகியாக நடித்திருந்தார்.
வித்தியாசமான கதைக்களம், வேறுபட்ட கோணம் என சுப்ரமணியபுரம், சசிகுமார், ஜெய்,சுவாதி மற்றும் சமுத்திரக்கனி என அனைவருக்குமே திருப்புமுனையாக அமைந்திருந்தது. இப்பட வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார், ஜெய் மற்றும் சமுத்திரக்கனி என மூவரும் தனித்தனியே பிரிந்து நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது வசந்த்மணி இயக்கத்தில் மூன்று பேரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது கதையை சசி, ஜெய் மற்றும் சமுத்திரக்கனி என மூவரையும் அழைத்து ஒரு சேர கூறினாராம் வசந்த்மணி.
மூவருக்கும் கதை பிடித்து விட்டதால், அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த சந்திப்பின் போது குடித்து விட்டு வண்டி ஓட்டிதற்காக ஜெய்யை திட்டினார்களாம் சசிகுமாரும், சமுத்திரக்கனியும்.
அதுக்கு சுப்பிரமணியபுரத்தில் செய்வதைப் போல தலையை ஆட்டி ஆட்டி சிரித்தபடி சமாளித்தாரா ஜெய் என்று தெரியவில்லை!