Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மறுபடியும் தலையை ஆட்ட வருகிறார் ஜெய்.... மீண்டும் கை கோர்க்கும் "சுப்ரமணியபுரம் கேங்"!
சென்னை: சசிகுமார் இயக்கி நடித்திருந்த படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் ஜெய் மற்றும் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுவாதி நாயகியாக நடித்திருந்தார்.
வித்தியாசமான கதைக்களம், வேறுபட்ட கோணம் என சுப்ரமணியபுரம், சசிகுமார், ஜெய்,சுவாதி மற்றும் சமுத்திரக்கனி என அனைவருக்குமே திருப்புமுனையாக அமைந்திருந்தது. இப்பட வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார், ஜெய் மற்றும் சமுத்திரக்கனி என மூவரும் தனித்தனியே பிரிந்து நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது வசந்த்மணி இயக்கத்தில் மூன்று பேரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது கதையை சசி, ஜெய் மற்றும் சமுத்திரக்கனி என மூவரையும் அழைத்து ஒரு சேர கூறினாராம் வசந்த்மணி.
மூவருக்கும் கதை பிடித்து விட்டதால், அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த சந்திப்பின் போது குடித்து விட்டு வண்டி ஓட்டிதற்காக ஜெய்யை திட்டினார்களாம் சசிகுமாரும், சமுத்திரக்கனியும்.
அதுக்கு சுப்பிரமணியபுரத்தில் செய்வதைப் போல தலையை ஆட்டி ஆட்டி சிரித்தபடி சமாளித்தாரா ஜெய் என்று தெரியவில்லை!