Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்!
சென்னை: க/பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர் விருமாண்டி இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம், க/பெ.ரணசிங்கம். இதை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கி இருந்தார்.
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தை கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்தார்.
வரவேற்பை பெற்றது
இதில் ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜா காமராஜ், பவானி ஶ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் ஒடிடியில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் விருமாண்டியையும் படத்தில் பணியாற்றியவர்களையும் அனைவரும் பாராட்டினர்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. எனது திரையுலக வாழ்க்கையில் 'க/பெ ரணசிங்கம்' முக்கியமான படம் என்று கூறியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், இயக்குனர் விருமாண்டி அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார். உண்மை சம்பவக் கதை ஒன்றை அவர் இயக்க இருக்கிறார்.
அலுவலக பூஜை
இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை இன்று நடைபெற்றது.
நடிகர், நடிகைகள்
படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஏப்ரல் மாதம் ஷூட்டிங்கை தொடங்கி, இந்த ஆண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அடுத்த நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.