Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உத்தா பஞ்சாப் குழுவினரின் சென்சாருக்கு எதிரான வெற்றி நம் அனைவருக்கும் பொதுவானது - சசிக்குமார்
சென்னை: ''சென்சாருக்கு எதிரான உத்தா பஞ்சாப் குழுவினரின் வெற்றி நம் அனைவருக்கும் பொதுவானது'' என நடிகர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.
பாலிவுட் படமான உத்தா பஞ்சாப் தணிக்கையில் 89 இடங்களில் வெட்டுப்பட கோபமடைந்த படத்தின் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே 13 வெட்டுகளுடன் தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்தனர்.
ஆனால் இன்னும் பழைய பாட்டியாக இல்லாமல் காலத்திற்கு ஏற்றவாறு மாறுங்கள் என்று சென்சாருக்கு அறிவுரை கூறிய உயர் நீதிமன்றம் இப்படத்தின் ஒரு காட்சியை மட்டும் நீக்குமாறு தீர்ப்புக் கூறியது.
இதனால் உத்தா பஞ்சாப் படக்குழுவுக்கு நாடு முழுவதும் உள்ள படைப்பாளிகள் தங்கள் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் சசிக்குமாரும் இணைந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் ''அனுராக் காஷ்யப்! தணிக்கை வாரியத்துக்கு எதிரான உங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல, எங்களுடையதும் தான்'' என்று தெரிவித்திருக்கிறார்.
சசிக்குமார் நடித்து வரும் கிடாரி படத்தின் 3 வது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.