வெங்கட் பிரபு மீது மீண்டும் ஒரு கதை திருட்டு புகார் ...இயக்குனர் சசிதரன் வழக்கு!

சென்னை : நேரடி ஒளிபரப்பு " லைவ் டெலிகாஸ்ட் "கதையை வாராயோ வெண்ணிலாவே இயக்குனர் சசிதரனிடமிருந்து இயக்குனர் வெங்கட் பிரபு திருடியதாக கூறி சசிதரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

நேரடி ஒளிபரப்பு " லைவ் டெலிகாஸ்ட் " வெப்சீரிஸ் கதை திருட்டு சம்மந்தமாக சமீபத்தில் சில யு டியூப் சேனனல்கலில் கதையின் ஆதாரத்துடன் இயக்குனர் சசிதரன் பேட்டியளித்துள்ளார். பேட்டியின் நடுவே ஆதாரங்கள் காண்பிக்கப்படுகிறது. அதை பார்த்து திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபுவும் இயக்குனர் சசிதரனும் சென்னை 28 க்கு முன் நண்பர்களாக இருந்துள்ளனர். அந்த கால கட்டத்தில் வெங்கட் பிரபு இயக்க சசிதரன் திரைப்படம் இயக்க இருவரும் முயற்சி செய்துக்கொண்டிருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

புகாரிட்ட சசி

புகாரிட்ட சசி

இயக்குனர் சசிதரன் வெங்கட் பிரபு கதை திருட்டு பிரச்னையில் இருவருக்கும் நண்பர்களாக பழகியவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். இயக்குனர் சங்கத்தில் புகாரிட்ட சசிதரனுக்கு எதிராக மூன்று இயக்குனர்களை வெங்கட் பிரபு தயார் செய்திருக்கிறாராம்.

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

அண்மையில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸ் பார்த்தவர்கள் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்து , சசிதரன் கொடுத்த 2007 இல் எழுதிய கதை சுருக்கத்தின் அப்பட்டமான காப்பியாக இருந்ததாக கூறுகின்றனர். இதனால் வெங்கட் பிரபுவுக்கு பின்னடைவு அடைந்திருக்கிறது. மாநாடு படம் வெளியாகும் முன் வெங்கட் பிரபு மேல் இருக்கும் கதை திருட்டு புகாருக்கு சுமூக முடிவு எடுக்க சொல்லி இருக்கிறார் அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி .

ஹாட் ஸ்டார் வெப்சீரிஸாக

ஹாட் ஸ்டார் வெப்சீரிஸாக

தெருவோர கிரிக்கெட் விளையாடுபவர்களின் வாழ்க்கை என்று மூலக்கதையை கூறிய வெங்கட் பிரபு அதற்க்கு கதையை சசிதரன் என்ற தனது நண்பரை எழுத கூறியுள்ளார். அதுவே பின்னர் சென்னை இருபத்தியெட்டு . சென்னை 28 படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதிய சசிதரனின் பெயரை டைட்டிலில் திரைக்கதை வசன உதவி என போட்டு இருட்டடிப்பு செய்துவிட்டதாக வெங்கட் பிரபு மேல் புகார் எழுந்துள்ளது. 2007 இல் நடந்த இந்த சம்பவம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. அதே இயக்குனரின் நேரடி ஒளிபரப்பு என்ற பதிவு செய்த கதையை தான் மீண்டும் வெங்கட் பிரபு "லைவ் டெலிகாஸ்ட்" என்ற பெயரில் ஹாட் ஸ்டார் வெப்சீரிஸாக தயாரித்து இயக்கி விட்டார் என்பதே சமீபத்திய புகார்.

வாங்கி வெளியிடும்

வாங்கி வெளியிடும்

சசிதரனின் கதையை படமாகிவிட்ட வெங்கட் பிரபு புகாரளித்த சசிதரன் மேல் உள்ள கோபத்தில் சசிதரன் இயக்கி ஆறி அர்ஜுனா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத இரண்டாவது படத்தை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். ஏனென்றால் சசிதரனின் இரண்டாவது படத்தை தயாரிப்பவர் , வெங்கட் பிரபுவின் நீண்ட கால குடும்ப நண்பர் கமல் ஏகாம்பரம் என்பவராம்.வெங்கட் பிரபு மேல் புகாரளித்த இயக்குனர் சசிதரனின் முதல் படம் வாராயோ வெண்ணிலாவே படத்தை பார்த்த ஒரு பெரிய நிறுவனம் அவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டியது மட்டுமில்லாமல் அந்த படத்தை வாங்கி வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.

அப்பட்டமான காப்பி

அப்பட்டமான காப்பி

வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதரனின் முதல் படமான வாராயோ வெண்ணிலாவேவை பார்த்த பிக்பாஸ் வெற்றியாளர் நடிகர் ஆரி அர்ஜுனன் இயக்குனர் சசிதரனுடன் சேர்ந்து பணி புரிய விருப்பம் தெரிவித்திருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு வின் லைவ் டெலிகாஸ்ட் வெப்செரிஸ் இயக்குனர் சசிதரன் பதிவு செய்து வைத்திருந்த நேரடி ஓளிபரப்பு கதையின் அப்பட்டமான காப்பியாம்.வெப் சீரிஸ் வெளியான பிறகு இதை பார்த்த திரையுலகினர் சசிதரனுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அஜித் விஜய்க்கும் பொருத்தமான

அஜித் விஜய்க்கும் பொருத்தமான

மங்காத்தாவிற்கு பிறகு தொடர்ந்து சரிவில் இருந்த வெங்கட் பிரபு அதிலிருந்து மீளவே இயக்குனர் சசிதரனின் கதையில் கை வைத்திருக்கிறாராம். இது ஆதாரபூர்வமாக விரைவில் நிரூபணமாகும் என தெரிவிக்கின்றனர்.
சங்கத்தின் ஒத்துழைப்பு ஆமை வேகத்தில் எடுத்ததாலேயே நேரடி ஒளிபரப்பு வெப்செரிஸ் கதை எழுதிய உண்மையான கதாசிரியர் சசிதரனுக்கு எழுத்தாளர் சங்கத்தில் நீதி கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதரனிடம் பதிவு செய்யப்பட பல கதைகள் உள்ளதாம். அஜித் விஜய்க்கும் பொருத்தமான கதைகள் உள்ளதென அவருக்கு தெரிந்த இயக்குனர்கள் அதை முறைப்படி அவரிடம் வாங்கி இயக்கலாம் என்ற யோசனையில் உள்ளார்களாம்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனும் வெங்கட் பிரபு மேல் கதை திருட்டு புகாரளித்த இயக்குனர் சசிதரணும் நெருங்கிய குடும்ப நண்பர்களாம். ஹாட் ஸ்டார் நிறுவனம் இயக்குனர் சசிதரனிடம் வெப்சீரிஸ் இயக்கி கொடுக்க கதை கேட்டுள்ளார்களாம். பிரச்னையை சுமுகமாக முடிக்கும் முயற்சியோ ? என்று தெரியவில்லை . மக்கள் நீதி மைய உறுப்பினரான இயக்குனர் சசிதரன் சமீபத்தில் வெங்கட் பிரபு மேல் அளித்த கதை திருட்டு புகாரை தனது கடசியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனிடம் இந்த பிரச்னை குறித்து தீர்வு காண பேசவிருக்கிறாராம். நேரடி ஒளிபரப்பு கதை விஜய் ஹாட் ஸ்டாரில் வெளியானதால் அதை தனது கட்சி தலைவர் கமல்ஹாசன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் இயக்குனர் சசிதரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X