Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான் கான் நல்லவராப் போயிட்டாரோ?: சதீஷ்
சென்னை:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இந்தியர்கள் தலையில் வைத்து கொண்டாடுவது நடிகர் சதீஷுக்கு பிடிக்கவில்லை.
பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியதை பார்த்து இந்தியர்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் அபிநந்தன் பற்றி ட்வீட் போட அது விவாதத்தில் முடிந்துள்ளது.
|
சதீஷ்
#அபிநந்தன் நீங்கள் இந்தியாவின் பெருமை... நமது ராணுவத்தின் பெருமை.... உங்கள் வீரத்தையும் நாட்டுப்பற்றையும் பார்த்து நமது நாட்டை தரக்குறைவாக பேசுபவர்கள் திருந்த வேண்டும். #ஜெய்ஹிந்த் 🇮🇳 🙏🏻 #WelcomeBackAbhinandan என்று சதீஷ் ட்வீட் செய்தார்.
|
பாகிஸ்தான்
சதீஷின் ட்வீட்டை பார்த்த ஒருவர், பாகிஸ்தானை யாரும் ஆதரிக்கவில்லை..பிடிபட்ட வீரர் அபிநந்தனை இரண்டே நாட்களில் விடுவித்த அந்நாட்டு பிரதமரின் நடவடிக்கை மட்டுமே ஆதரிக்கப்படுகிறது...! என்றார். அதை பார்த்த சதீஷ், நம் நாட்டை தாக்க வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்துச் செல்லும் போது தான் அபிநந்தன் அங்கே விழுந்திருக்கிறார். அவரை விடுவித்த பாகிஸ்தானை பாராட்டும் தாங்கள் நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள்?!? என்று கேள்வி எழுப்பினார்.
|
பாஜக
இப்டி ஏதாச்சும் கேட்டீங்கனா உங்களயும் பிஜேபி ஆளுனு கோத்துவிட்டருவாங்க...பாத்து ப்ரோ.... என்று ஒருவர் சதீஷுக்கு அறிவுரை வழங்க அவரோ, நம் தாய் நாட்டை நேசிக்கும் ஒரு சாதாரண மனிதன் அவ்ளோதான் ப்ரோ. நன்றி என்று பதில் அளித்துள்ளார்.
மோடி
அபிநந்தனை விடுதலை செய்ய உத்தரவிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிய இந்தியர்கள் நம் பிரதமர் மோடியை விளாசினார்கள். இந்நிலையில் தான் சதீஷ் இப்படி ட்வீட் செய்தார்.