Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எம்ஜிஆர் வேஷத்துக்கு இவர் பொருத்தமா இருக்காரா?
சென்னை: எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது வேடத்தில் நடிக்க சதீஷ்குமார் என்பவரைத் தேர்வு செய்துள்ளனர்.
அவருக்கு எம்ஜிஆர் கெட்டப் போட்டு எடுக்கப்பட்ட ஸ்டில்களையும் வெளியிட்டுள்ளனர்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது.
சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆரின் வரலாறு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது.
பாத்திரங்கள் தேர்வு
ரமணா கம்யூனிகேஷன்ஸ்-ன் முந்தைய தயாரிப்புகளான ‘காமராஜ்' மற்றும் ‘முதல்வர் மகாத்மா' ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் நடித்திருந்தனர், அதைப்போன்று இப்படத்துக்கான நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் அ பாலகிருஷ்ணன்.
எம்ஜிஆர் வேடத்தில்...
எம்.ஜி.ஆர் சினிமா, மற்றும் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல தென்னிந்திய மொழிப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர், இப்படத்துக்காக வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற சண்டைப்பயிற்சிகளை கற்று வருகிறார்.
எஸ்எஸ் ஸ்டான்லி
அண்ணாவாக ‘பெரியார்' திரைப்படத்தில் நடித்த எஸ்எஸ் ஸ்டான்லியே இப்படத்திலும் அண்ணாவாக நடிக்கிறார். ‘காமராஜ்' திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இப்படத்திற்கும் எழுதியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்கிறார். நவம்பர் 8 ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்கிறார்