Don't Miss!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பாட்ஷா இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்! - சத்யா மூவீஸ்
தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் படமான ரஜினியின் பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக சத்யா மூவீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
22 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றியைப் பெற்ற பாட்ஷா படத்தை, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியிட்டனர்.
தமிழ் திரைலகிலும், உலகெங்கும் உள்ள தீவிர ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது இந்த டிஜிட்டல் பாட்ஷா.
இந்த டிஜிட்டல் பதிப்பிற்கு மூல காரணமாக செயல்பட்ட தங்கராஜை ( ஆர்.எம் வீரப்பனின் மகன்) சமீபத்தில் தன் வீட்டுக்கு வரவழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தினார்.
இதுகுறித்து தங்கராஜ் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 120 திரையரங்குகளில் இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறிய 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி உள்ளது. மேலும், ஐம்பது வருடம் பழமை வாய்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம், 22 வருடத்திற்கு முன் தாங்கள் வெளியிட்ட அதே படத்தை மீண்டும் ஒருமுறை பிரம்மாண்டமாக வெளியிட்டிருப்பது, தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் இந்த டிஜிட்டல் - பாட்ஷா அமோக வரவேற்பை பெற்று இருப்பது, ரஜினி சாருக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. சமீபத்தில் ரஜினி சார் எனது தந்தையை நேரில் சந்தித்து, அவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றார். அவர்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிய பிறகு, ரஜினி சார் என்னை இந்த பாட்ஷா படத்தின் வெற்றிக்காக வாழ்த்தியது மட்டுமின்றி, அடுத்து இதே போல் மூன்று முகம் படத்தையும் வெளியிட வேண்டும் என்று கூறினார்.
எங்கள் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பபை பற்றியும் அவர் எங்களிடம் கேட்டறிந்தார். என்னால் ஒன்றை மட்டும் மிக உறுதியாக சொல்ல முடியும். இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் 'பாட்ஷா' படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், ரஜினி சார்தான்.
தற்போது 'பாட்ஷா' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சித்து வருவது மட்டுமின்றி, அதற்கேற்ற கதைகளையும் கேட்டு வருகின்றோம்," என்றார்.