twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டில் சிக்கிய நாயை தத்தெடுத்தார் சத்யராஜ்!

    By Mayura Akilan
    |

    சென்னை: மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இருந்து சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட நாயை நடிகர் சத்யராஜ் தத்தெடுத்துக் கொண்டார்.

    சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    Sathyaraj adopts Moulivakkam site dog

    கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்கள் மீட்கும் பணி சுமார் ஒரு வாரம் நடைபெற்றது. அப்போது, இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு நாய்கள் மற்றும் ஒரு காகத்தை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.

    ப்ளூ கிராஸ் அமைப்பின் பராமரிப்பில் இருந்த அந்த நாய்க்குட்டிகள் ஒன்று ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டது. எஞ்சிய மற்றொரு நாய்க்குட்டியை நடிகர் சத்யராஜ் இன்று தத்தெடுத்துக் கொண்டார். அப்போது, அவரது மகன் சிபி ராஜ் உடன் இருந்தார்.

    மீட்கப்பட்ட காகம் நல்ல ஆரோக்கியம் அடைந்ததை அடுத்து, அது மீண்டும் பறக்கவிடப்பட்டது.

    English summary
    Actor Sathyaraj has adopted a dog, which was rescued from the Moulivakkam site, where a 11 storey building collapsed recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X