Don't Miss!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
தாத்தாவின் தோள் மீது ஒய்யார ஆட்டம்... பேரக்குழந்தைகளுடன் விளையாடும் சத்யராஜ் !
சென்னை : நடிகர் சத்யராஜ் தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒப்பற்ற கலைஞராக வலம் வருபவர் சத்யராஜ்.
சில மணிநேரங்களில் 3 மில்லியன் வியூக்கள்... தெறிக்க விடும் ஜகமே தந்திரம் ட்ரெயிலர்
இவர் காமெடி, வில்லன், கதாநாயகன் என எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தனக்கென தனி முத்திரைப்பதிப்பார்.
வில்லனாக
கோவை மாவட்டத்தில் பிறந்த சத்யராஜ், தமிழ் திரையுலகுக்கு வில்லனாக தனது அறிமுகத்தை கொடுத்தார். பாரதிராஜா இயக்கிய கடலோரக் கவிதைகள் திரைப்படம் தான் இவருக்கு ஹீரோவுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
வரலாற்று சாதனை
இதையடுத்து, ரஜினிகாந்த், கமல்,பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றார். சத்யராஜ் நடித்த பெரியார் திரைப்படமும் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படமும் வரலாற்று சாதனை படைத்த படங்களாக மாறின.
உலகத்தரத்திற்கு
இவர் நடித்த அம்மாவாசை கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதேபேல ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்து அசத்தி இருப்பார். அதேபோல உலகமே வியந்து பாராட்டிய பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்து மிரட்டி தனது பெயரை உலகத் தரத்திற்கு கொண்டு சென்றார் சத்யராஜ்.
பேரக்குழந்தைகளுடன்
இந்த கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதை கழித்து வரும் சத்யராஜ், தனது பேரக்குழந்தைகளான தீரன் மற்றும் சமரனை தனது தோளில் அமர வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டுகிறார். இருவரும் தாத்தாவுடன் தோளில் அட்டகாசமாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த புகைப்படத்தை சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.