Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீட் குழப்பம், மோசடி மருந்து கம்பெனிகள், லஞ்சம் - கொலை மிரட்டல்! - மோடிக்கு சத்யராஜ் மகள் கடிதம்
கடந்த வாரம் சில வெளி நாட்டு மருத்துவ நிறுவனங்கள் பிரபல மருத்துவரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே.
இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த வகையான அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் அதே கடிதத்தில் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும் , நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி உள்ளார்.
திவ்யா சத்யராஜ் டாக்டராகப் பணியாற்றுகிறார் என்பதால் குறிப்பிட்ட மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க சில அமெரிக்க மருந்து கம்பெனிகள் வற்புறுத்தியுள்ளன. அதற்காக அவருக்கு லஞ்சம் தர முனைந்திருக்கிறார்கள். அவர் வாங்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதேபோல நீட் தேர்வில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்குள்ளானதாகவும், அதனால் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.