Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நீட் குழப்பம், மோசடி மருந்து கம்பெனிகள், லஞ்சம் - கொலை மிரட்டல்! - மோடிக்கு சத்யராஜ் மகள் கடிதம்
கடந்த வாரம் சில வெளி நாட்டு மருத்துவ நிறுவனங்கள் பிரபல மருத்துவரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே.
இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த வகையான அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் அதே கடிதத்தில் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும் , நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி உள்ளார்.
திவ்யா சத்யராஜ் டாக்டராகப் பணியாற்றுகிறார் என்பதால் குறிப்பிட்ட மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க சில அமெரிக்க மருந்து கம்பெனிகள் வற்புறுத்தியுள்ளன. அதற்காக அவருக்கு லஞ்சம் தர முனைந்திருக்கிறார்கள். அவர் வாங்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதேபோல நீட் தேர்வில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்குள்ளானதாகவும், அதனால் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.