Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகன் சிபிக்காக ‘பேயாக’ மாறும் சத்யராஜ்!
சென்னை: சிபிராஜ் நடித்து வரும் ஜாக்சன் துரை படத்தில் சத்யராஜ் பேயாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் இது பேய்க்காலம் எனலாம். தொடர்ந்து பேய்ப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. இந்த நம்பிக்கையில் புதிதாக பல பேய்ப்படங்கள் தயாராகி வருகின்றன.
அந்தவகையில், சிபிராஜ் நடித்து வரும் ஜான்சன் துரை படமும் பேய்ப்படமாகவே உருவாகி வருகிறது.
ஜாக்சன் துரை...
பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார். நாய்கள் ஜாக்கிரதைப் படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடிக்கும் படம் இது. இப்படத்திற்காக 10கிலோ எடை குறைந்துள்ளாராம் சிபிராஜ்.
முதல் சரித்திரப் பேய்ப்படம்...
இந்தியாவின் முதல் சரித்திரப் பேய்ப்படம் என்ற அறிவிப்போடு இப்படம் தயாராகி வருகிறது. ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்எஸ் சரவணன் மிகப் பிரமாண்டமாய் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
பிந்து மாதவி ஜோடி...
கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். இவர்கள் தவிர சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கஞ்ஜூரிங் மேக்கப்...
தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ஜாக்கெரி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கஞ்ஜூரிங் படத்தின் ஒப்பனை தொழில் நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பிரமாண்ட அரங்குகள்...
இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 - ல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மிகுந்த பொருள் செலவில் மிக பிரமாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பேயாக சத்யராஜ்...
இந்நிலையில், இப்படத்தில் சத்யராஜ் பேய் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆண் பேய்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வரிசையில் சத்யராஜூம் இணைந்து விட்டார்.