Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சத்யராஜ் படத்திற்கு தடை கோரி வழக்கு சத்யராஜ் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி எல்.ஐ.சி. வீட்டு வசதிக் கடன்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுயேச்சை எம்.எல்.ஏ. நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள இப்படம்விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை எல்.ஐ.சி வீட்டு வசதி கடன் கழக கிளை மேலாளர்எம்.ஏ. காதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.அதில், சென்னையைச் சேர்ந்த கோவிந்தராஜன், அன்பழகன், மரியா, ஸ்டான்லி, சுகுமார், கருணாநிதி, வரதராஜன் ஆகியோர்எங்களது நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக ரூ. 50 லட்சம் வாங்கினர். ஆனால் அதை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை. இந்தநிலையில் ஆந்திரா வங்கியிலும் அவர்கள் வீட்டுக் கடன் வாங்கியுள்ளனர்.மேலும் வீட்டுக் கடனுக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களும் போலியானவை என்று தெரிய வந்தது. இந்த நிலையில்எங்களிடம் வீட்டுக் கடன் வாங்கியவர்களில் ஒருவரான ஸ்டான்லி என்பவர் சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற பெயரில் படத்தைத்தயாரித்துள்ளார். கடன் மற்ற 6 பேரும் இதில் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.வீட்டுக் கடன் என்ற பெயரில் கடன் வாங்கி அதைக் கொண்டு அவர்கள் படம்த யாரித்துள்ளனர். எனவே அவர்கள் படத்தைத்திரையிட தடை விதித்தும், படச் சுருளை நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட வேண்டும்என்று கோரப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
சத்யராஜ் நடித்துள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி எல்.ஐ.சி. வீட்டு வசதிக் கடன்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுயேச்சை எம்.எல்.ஏ. நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள இப்படம்விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை எல்.ஐ.சி வீட்டு வசதி கடன் கழக கிளை மேலாளர்எம்.ஏ. காதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதில், சென்னையைச் சேர்ந்த கோவிந்தராஜன், அன்பழகன், மரியா, ஸ்டான்லி, சுகுமார், கருணாநிதி, வரதராஜன் ஆகியோர்எங்களது நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக ரூ. 50 லட்சம் வாங்கினர். ஆனால் அதை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை. இந்தநிலையில் ஆந்திரா வங்கியிலும் அவர்கள் வீட்டுக் கடன் வாங்கியுள்ளனர்.
மேலும் வீட்டுக் கடனுக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களும் போலியானவை என்று தெரிய வந்தது. இந்த நிலையில்எங்களிடம் வீட்டுக் கடன் வாங்கியவர்களில் ஒருவரான ஸ்டான்லி என்பவர் சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற பெயரில் படத்தைத்தயாரித்துள்ளார். கடன் மற்ற 6 பேரும் இதில் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
வீட்டுக் கடன் என்ற பெயரில் கடன் வாங்கி அதைக் கொண்டு அவர்கள் படம்த யாரித்துள்ளனர். எனவே அவர்கள் படத்தைத்திரையிட தடை விதித்தும், படச் சுருளை நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட வேண்டும்என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.