Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலச்சந்தர், கமலிடம் விருது பெற்ற புது இயக்குநரின் 'சவாரி'
கே பாலச்சந்தர், கமல் ஹாஸன் என்ற பெரிய ஜாம்பவான்களிடம் விருது பெற்ற புதிய இயக்குநர் குகன் சவாரி என்ற பெயரில் இயக்குகிறார்.
டேக் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அறிமுக நாயகன் பெனிட்டோ, சனம் செட்டி, ‘முண்டாசுப்பட்டி' முனிஷ்காந்த், கார்த்திக் யோகி, கவிதாலயா கிருஷ்ணன் நடிக்கின்றனர்.
‘பரதேசி' புகழ் ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவு செய்ய, அமரர் கிஷோர் டிஇ படத்தொகுப்பு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் குகன் கூறுகையில், "நாம் அன்றாடம் தெருவிற்கு தெரு, சாலைக்கு சாலை பார்க்கும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம். க்ரைம் த்ரில்லர் பாணி படங்களில் இதுவரை தொட்டிடாத ஒரு புதிய கதைகளத்தை கொண்டதுதான் ‘சவாரி'.
நாளைய இயக்குனர்-3 நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் சார் மற்றும் கமல் ஹாசன் சார் அவர்களிடம் விருது வாங்கினேன். என் முதல் படத்தை இவர்கள் இருவருக்கும் திரையிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், பாலசந்தர் சார் இன்று நம்மிடையே இல்லை எனினும் அவர் எனக்கு அளித்த கௌரவத்தை ‘சவாரி' காப்பாற்றும்" என்றார் நம்பிக்கையுடன்.