கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் தரச்சொல்லி அடித்து உதைத்த போலீஸ்! - சக்ஸேனா, அய்யப்பன் கதறல்

By Shankar

Hansraj Saxena
சென்னை: சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்கு மூலம் தரச்சொல்லி தங்களை அடித்து உதைத்து கொடும் சித்திரவதை செய்தனர் சிபிசிஐடி போலீசார் என சன் பிக்சர்ஸ் சக்ஸேனா மற்றும் அவரது உதவியாளர் அய்யப்பன் நீதிமன்றத்தில் கதறி அழுதனர்.

சன் பிக்சர்ஸ் சக்ஸேனா மற்றும் அய்யப்பன் ஆகியோரை பல்வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து அவர்கள் வெளியில் வருவதற்குள் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தம்பிக்கோட்டை படம் தொடர்பாக சக்ஸேனாவும் அய்யப்பனும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர் சிபிசிஐடி போலீசார். பின்னர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருவரையும் அழைத்துவந்தனர் போலீசார்.

அப்போது வேனிலிருந்து இறங்கிய அய்யப்பன் மிகவும் தளர்ந்த நிலையில், நடக்க முடியாத அளவுக்கு தள்ளாடினார். சக்ஸேனாவும் மிகவும் தளர்ந்து காணப்பட்டார்.

அங்கிருந்த நிருபர்களைப் பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தனர் சக்ஸேனாவும் அய்யப்பனும். தங்களை போலீசார் கடுமையாக அடித்து உதைத்ததாக கதறினர்.

அய்யப்பன் உடலில் ஏராளமான காயங்கள் காணப்பட்டன. சில இடங்களில் சதை பிய்ந்து, சீழ் வைத்திருந்தது. வலியில் கதறிய அய்யப்பன், கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்கு மூலம் தரச்சொல்லி போலீசார் அடித்து உதைக்கின்றனர் என்றும், இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தால் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறினார்.

பின்னர் நீதிபதி முன் விசாரணைக்கு நிறுத்தப்பட்டபோது, அய்யப்பன் தன் வேட்டியை அவிழ்த்து, போலீசார் அடித்த காயத்தைக் காட்டினார். இடுப்புப் பகுதியில் கடுமையான காயம் இருந்ததைப் பார்த்த நீதிபதி அதுகுறித்த காரணத்தைக் கேட்டார்.

அப்போது விசாரணையின்போது டிஐஜி ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் தன்னையும் சக்ஸேனாவையும் ரத்தகாயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியதாகக் கூறினார்.

வரும் செப்டம்பர் 23-ம் தேதி வரை இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதை நீதிபதி அறிவித்தபோது, அய்யப்பன் மயங்கி விழுந்தார். பின்னர் சக்சேனா மற்றும் அய்யப்பனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

போலீசார் மீது அய்யப்பன் கூறிய புகாரை தனி மனுவாக எழுதி வாங்கிக் கொண்டார் நீதிபதி.

சக்சேனா, அய்யப்பன் இருவரையும் போலீசார் இந்த அளவு கடுமையாக தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை நீதிமன்ற வளாகத்தில் ஏற்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X