Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் தரச்சொல்லி அடித்து உதைத்த போலீஸ்! - சக்ஸேனா, அய்யப்பன் கதறல்
சன் பிக்சர்ஸ் சக்ஸேனா மற்றும் அய்யப்பன் ஆகியோரை பல்வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து அவர்கள் வெளியில் வருவதற்குள் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தம்பிக்கோட்டை படம் தொடர்பாக சக்ஸேனாவும் அய்யப்பனும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர் சிபிசிஐடி போலீசார். பின்னர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருவரையும் அழைத்துவந்தனர் போலீசார்.
அப்போது வேனிலிருந்து இறங்கிய அய்யப்பன் மிகவும் தளர்ந்த நிலையில், நடக்க முடியாத அளவுக்கு தள்ளாடினார். சக்ஸேனாவும் மிகவும் தளர்ந்து காணப்பட்டார்.
அங்கிருந்த நிருபர்களைப் பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தனர் சக்ஸேனாவும் அய்யப்பனும். தங்களை போலீசார் கடுமையாக அடித்து உதைத்ததாக கதறினர்.
அய்யப்பன் உடலில் ஏராளமான காயங்கள் காணப்பட்டன. சில இடங்களில் சதை பிய்ந்து, சீழ் வைத்திருந்தது. வலியில் கதறிய அய்யப்பன், கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்கு மூலம் தரச்சொல்லி போலீசார் அடித்து உதைக்கின்றனர் என்றும், இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தால் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறினார்.
பின்னர் நீதிபதி முன் விசாரணைக்கு நிறுத்தப்பட்டபோது, அய்யப்பன் தன் வேட்டியை அவிழ்த்து, போலீசார் அடித்த காயத்தைக் காட்டினார். இடுப்புப் பகுதியில் கடுமையான காயம் இருந்ததைப் பார்த்த நீதிபதி அதுகுறித்த காரணத்தைக் கேட்டார்.
அப்போது விசாரணையின்போது டிஐஜி ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் தன்னையும் சக்ஸேனாவையும் ரத்தகாயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியதாகக் கூறினார்.
வரும் செப்டம்பர் 23-ம் தேதி வரை இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதை நீதிபதி அறிவித்தபோது, அய்யப்பன் மயங்கி விழுந்தார். பின்னர் சக்சேனா மற்றும் அய்யப்பனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் மீது அய்யப்பன் கூறிய புகாரை தனி மனுவாக எழுதி வாங்கிக் கொண்டார் நீதிபதி.
சக்சேனா, அய்யப்பன் இருவரையும் போலீசார் இந்த அளவு கடுமையாக தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை நீதிமன்ற வளாகத்தில் ஏற்படுத்தியது.