Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாப்பிள்ளை பட வழக்கு: சக்சேனாவுக்கு ஜாமீன்!
சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜபக். இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். தனுஷ், ஹன்சிகா ஆகியோர் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தை அவர் தயாரித்தார்.
இந்த நிலையில் கோடம்பாக்கம் போலீசில் நேமிசந்த் புகார் கொடுத்தார். அதில், பட விநியோகம் தொடர்பாக தன்னிடம் இருந்து சக்சேனா 3 கோடியே 37 லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் சக்சேனாவை கோடம்பாக்கம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி பி.தேவதாஸ் தள்ளுபடி செய்தார்.
அதைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ராஜசூர்யா விசாரித்தார். சக்சேனாவுக்கு ஜாமீன் அளித்து அவர் நீதிபதி உத்தரவிட்டார்.
சக்சேனா மீதான இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. அடுத்த இரு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரு வழக்குகளில் புகார்தாரர் மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். இப்போது ஏழாவது வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. ரஞ்சிதா - நித்யானந்தா வழக்கில் இப்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?