Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மோனிகாவின் ஆபாச படம்:ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் தடை
டெல்லி:போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ரகசியக் காமரா மூலம் ஆபாச கோலத்தில் எடுக்கப்பட்ட மோனிகா பேடியின் புகைப்படங்களை டிவிகளில் ஒளிபரப்ப கூடாது என உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போர்ச்சுகல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரப்பட்ட பின்னர் மோனிகா பேடி மீது போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டு போபால் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.இந்த வழக்கு மற்றும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போலி பாஸ்போர்ட் வழக்கு ஆகியவற்றில் ஜாமீன் பெற்ற மோனிகா பேடி தற்போது விடுதலையாகியுள்ளார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மோனிகா பேடி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், போபால் சிறையில் மோனிகா பேடி அடைக்கப்பட்டிருந்தபோது, அவர் குளியலறையில் குளித்த காட்சியை ரகசியக் காமரா வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இதை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
இந்தப் புகைப்படத்தை எந்தத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை எந்தத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பக் கூடாது என்று மத்திய அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், தனது ஆபாசப் புகைப்படத்தை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி மீது வழக்கு தொடர மோனிகா பேடிக்கு உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!