Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
‘காலா’க்கு உரிமை கோரிய மனு... தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
காலா படம் தொடர்பாக ராஜசேகர் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Recommended Video
சென்னை: காலா படத்திற்கு தடை விதிக்கக்கோரி ராஜசேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. இது ரஜினியின் 164-ஆவது படம். இப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.
முன்னதாக இப்படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜசேகர் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 -ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக கூறிய ராஜசேகர், அப்படத்தின் கதையை ஏற்கெனவே இயக்குநர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 15-ஆம் தேதிக்குள் இயக்குநர் பா. ரஞ்சித்தும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் காலா படத்துக்கு தடை கோரி ராஜசேகர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை எனக்கூறி, நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.