மதூர் பண்டார்க்கர் மீது நடிகை ப்ரீத்தி தொடர்ந்த கற்பழிப்பு வழக்கு ரத்து!

1999-ம் ஆண்டு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜெயினை கற்பழித்ததாக மதூர் பண்டார்க்கர் மீது புகார் சுமத்தப்பட்டது. 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தன்னை 16 முறை கற்பழித்ததாக அவர் புகார் செய்தார்.
தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக் கூறி அவர் இவ்வாறு உடலுறவு கொண்டதாகவும், பின்னர் ஏமாற்றியதாகவும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு பொய்யானது என்றும், ரத்து செய்யுமாறும் உச்சநீதிமன்றத்தில் மதுர் பண்டார்க்கர் மனு செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











