கவர்ச்சி நடன சர்ச்சை… மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை

By Mayura Akilan

டெல்லி: மும்பையில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது ஆபாசமாக நடனமாடியதாக தொடரப்பட்ட வழக்கில் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2006 ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மும்பையில் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடந்தது. அதில் மல்லிகா கலந்து கொண்டு கவர்ச்சி நடனம் ஆடினார். இது டிவியில் லைவ் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Mallika Sheravat

இதையடுத்து மிகவும் ஆபாசமாக மல்லிகா நடனம் இருந்ததாக கூறி வக்கீல் நரேந்திர திவாரி, பரோடா வக்கீல்கள் சங்க முன்நாள் தலைவர் ஆகியோர் 2007ம் ஆண்டு வதோதரா கோர்ட்டில் வழக்குப் போட்டனர்.

இதில் மல்லிகாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரினார் மல்லிகா. குஜராத் உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் மல்லிகாவைக் கைது செய்ய வதோதரா கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் மல்லிகா ஷெராவத். அதை விசாரித்த நீதிமன்றம், பிடிவாரண்ட்டுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X