மாமியாருக்கு பயந்து 'அந்த' காட்சிகளில் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்?
மும்பை: மாமியாருக்கு பயந்து தான் ஐஸ்வர்யா ராய் ஃபேனி கான் படத்தில் சில காட்சிகளில் நடிக்க மறுத்துள்ளாராம்.
அதுல் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து வரும் பாலிவுட் படம் ஃபேனி கான். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ராஜ்குமார் ராவ் இடையே சில நெருக்கமான காட்சிகள் உள்ளதாம்.

நெருக்கமான காட்சிகள் குறித்து கேள்விப்பட்ட ஐஸ்வர்யா நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அவர் அந்த காட்சிகளில் நடிக்க மறுத்ததற்கு மாமியார் ஜெயா பச்சன் மீதான பயமே காரணம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்தபோது ஜெயா பச்சன் தான் அதிகமாக கோபப்பட்டாராம். மாமியார், மருமகள் இடையே பிரச்சனையாக கிடந்ததாக பாலிவுட்டில் பேசப்பட்டது.
இந்நிலையில் தான் ஐஸ்வர்யா ராய் நெருக்கமான காட்சிகளுக்கு நோ சொல்லியுள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications