Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தனுஷின் கொலவெறிப் பாடல் மாணவர்களைக் கெடுத்து விடும்-கவலையில் ஆசிரியர்கள், பள்ளிகள்!
இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.
இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.
கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.
மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.
இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.