Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காலா வில்லன் பட திரைக்கதை எழுத்தாளர் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Recommended Video
மும்பை: மும்பையில் 32 வயது திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் தான் வசித்து வந்த வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியில் உள்ள செவன் பங்களாஸ் பகுதியில் வசித்து வந்தவர் ரவி ஷங்கர் ஆலோக்(32). அவர் தனது சகோதரருடன் தங்கியுள்ளார்.
காலா பட வில்லன் நானா படேகரின் அப் தக் சாப்பான் படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் ஆலோக் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று இரவு 2 மணி அளவில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சகோதரர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஓராண்டு காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளார் ஆலோக். இதனால் அவர் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். மனஅழுத்தத்திற்கு சிகிச்சையும் எடுத்திருக்கிறார்.
ஆலோக் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை என்று அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.