Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காலா வில்லன் பட திரைக்கதை எழுத்தாளர் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Recommended Video
மும்பை: மும்பையில் 32 வயது திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் தான் வசித்து வந்த வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியில் உள்ள செவன் பங்களாஸ் பகுதியில் வசித்து வந்தவர் ரவி ஷங்கர் ஆலோக்(32). அவர் தனது சகோதரருடன் தங்கியுள்ளார்.
காலா பட வில்லன் நானா படேகரின் அப் தக் சாப்பான் படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் ஆலோக் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று இரவு 2 மணி அளவில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சகோதரர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஓராண்டு காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளார் ஆலோக். இதனால் அவர் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். மனஅழுத்தத்திற்கு சிகிச்சையும் எடுத்திருக்கிறார்.
ஆலோக் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை என்று அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.