Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஷால், குமரிமுத்துவுக்கு நடிகர் சங்கம் மீண்டும் நோட்டீஸ்
இருவரும் ஏற்கெனவே அளித்த விளக்கங்கள் திருப்தியாக இல்லாததால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் சங்க நிர்வாகிகள்.
நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் நடிகர்கள் விஷால், குமரிமுத்து பிரச்சினைகள் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
"விஸ்வரூபம்" படம் ரிலீசாக தடங்கள் ஏற்பட்ட போது நடிகர் சங்கம் கமலுக்கு உதவவில்லை என்று விஷால் விமர்சித்திருந்தார்.
இதற்கு நடிகர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இதற்கு விஷால் பதில் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் தனது மனதில் பட்டதை சொன்னதாகவும் என்னை புண்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். சமர் பட சம்பள பாக்கியை நடிகர் சங்கம் தனக்கு வாங்கித் தரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கடிதம் செயற் குழு உறுப்பினர்களிடம் சமர்பிக்கப்பட்டது. விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசினார்கள். இறுதியில் விஷாலிடம் விளக்கம் கேட்டு இன்னொரு நோட்டீஸ் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
குமரி முத்து
நடிகர் சங்க நிர்வாகிகளை அவமதித்து கருத்து வெளியிட்டதாக நடிகர் குமரிமுத்துக்கும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பபப்பட்டிருந்தது. செயற்குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் குமரிமுத்து செயற்குழுவுக்கு வரவில்லை. தனக்கு வேறு பணிகள் இருப்பதால் வர இயலவில்லை என்று கடிதம் அனுப்பி இருந்தார்.
எனவே அடுத்த செயற்குழுவில் ஆஜராகும்படி குமரிமுத்துவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.