Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மூக்கறுக்கணும், தலையை வெட்டணும்: மிரட்டலால் தீபிகாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
மும்பை: பத்மாவதி பிரச்சனையால் தீபிகா படுகோனேவுக்கு மும்பை போலீசார் சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள படம் பத்மாவதி. ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.
இந்த படத்திற்கு ராஜ்புட் கர்னி சேவா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தீபிகா
ராஜஸ்தான் மாநிலத்தின் பெருமையான பெண்ணான ராணி பத்மினியை அவமதித்து படம் எடுத்த பன்சாலி அதில் நடித்த தீபிகா ஆகியோரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. 5 கோடி அளிக்கப்படும் என்று அகில பாரதிய ஷத்ரிய யுவ மகாசபாவின் தேசிய தலைவர் தாகூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.
மிரட்டல்
ராஜ்புட் சமூகத்தினர் பெண்ணுக்கு எதிராக கை ஓங்க மாட்டோம். ஆனால் தேவைப்பட்டால் தீபிகாவின் மூக்கை அறுப்போம் என்று ராஜ்புட் கர்னி சேவா அமைப்பு மிரட்டியுள்ளது.
ரிலீஸ்
யார் என்ன சொன்னாலும் திட்டமிட்டபடி படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீஸாகும் என்று தீபிகா தில்லாக தெரிவித்துள்ளார். மேலும் பத்மாவதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் நாடு பின்னோக்கி செல்கிறது என்று கூறியுள்ளார்.
பாதுகாப்பு
இரண்டு அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து தீபிகாவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.