Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழன்டா! மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி பாராட்டிய சீமான்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மவுன போரட்டம் நடத்திய நடிகர் சிம்புவை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பாராட்டினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தனது வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்தினார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தாரும் மவுனமாக நின்றிருந்தார்கள்.
இந்த போராட்டத்தில் இயக்குனர் ராமும் கலந்து கொண்டார். சிம்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகள், அலுவலகங்கள் முன்பு மவுன போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை சந்தித்து பாராட்டினார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தினோம். தடையை மீறி நடத்தியதால் எங்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவோம்.
படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு கதையை சொல்லக்கூடாது என்பது போன்று நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்த உள்ள இடங்களின் விபரங்களை தெரிவிக்க மாட்டோம். நாங்கள் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டை நடத்துவோம். சட்டத்தை மதித்து கைதாகுவோம்.
கைதாவதை மகிழ்ச்சியாக நினைக்கும் கூட்டம் நாங்கள். கைதாவதை வரவேற்கிறோம் என்றார்.