Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி'!- சீமான் பாராட்டு
ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி' என்று பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.
நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார்.
படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ''நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வயிறு குலுங்க சிரித்த படம் கத்துக்குட்டிதான். மிக ஆழமான சிந்தனையை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி புதுமையான திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள்.
குறிப்பாக தம்பி சூரி வரும் ஒவ்வொரு காட்சியும் வயிறு புண்ணாகி விடுகிறது. மிக வித்தியாசமான உடல் மொழியில் விளையாடித் தீர்த்திருக்கிறார் சூரி.
படத்தின் பெயர்தான் 'கத்துக்குட்டி'யே தவிர, எல்லோருக்கும் கத்துக் கொடுக்கும் குட்டியாக தம்பி இரா.சரவணன் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
விவசாயப் பின்னணியில் தஞ்சை மாவட்டத்தின் வாழ்வியலை படம் அருமையாகப் பிரதிபலிக்கிறது. படத்தின் ஒவ்வொரு வசனமும் முத்து முத்தாக நெஞ்சை ஈர்க்கிறது. நல்ல கருத்தை சொல்லும் விதமாகச் சொன்னால், கடைக்கோடி ரசிகனுக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை இந்தக் கத்துக்குட்டி நிரூபித்திருக்கிறது.
ஒவ்வொரு தமிழனும் தனக்கான படமாகப் பெருமிதத்தோடு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி நமக்காகப் பாடுபடும் ஒவ்வொரு விவசாயிக்குமான வெற்றியாக இருக்கும். எனவே, தமிழர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு போய் பார்த்து கத்துக்குட்டி படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!" என்றார்.
சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து கூறுகையில், ''படம் பார்த்து நிறைய இடங்களில் சிரித்தேன்; நிறைய இடங்களில் அழுதேன். வழக்கமான படங்களில் ஒன்றாக இல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதை அச்சு அசலாகப் படத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக படத்தில் வரும் ஒரு பாட்டி பாத்திரம் மனதைக் கொண்டாட வைத்துவிட்டது. மண் சார்ந்த பதிவை இவ்வளவு நகைச்சுவையாகவும் சுவாரசியமான திருப்பங்களுடனும் சொல்லி இருப்பது சிறப்பு. இறுதிக்கட்ட காட்சியில் என்னையும் மறந்து எழுந்து நின்று கைத்தட்டினேன். இந்த மண்ணுக்காக ஆத்மார்த்தமாக உழைக்கும் அத்தனை உழைப்பாளர்களுக்கும் ராஜமரியாதை செய்திருக்கிறது 'கத்துக்குட்டி' படம்," என்றார் சிலிர்ப்பு குறையாமல்.
'கத்துக்குட்டி' படம் நாளை (அக்டோபர் 1-ம் தேதி) திரைக்கு வருகிறது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!