பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு பாச முத்தம் கொடுத்து.. புலிக்கொடி போர்த்தி வீரவணக்கம் செலுத்திய சீமான்

தேனி: தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது உலகத்தமிழர் நெஞ்சங்களையெல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றிருக்கிறார் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. திரையில் தமிழ் மண்ணின் வாசனையையும், தமிழர்களின் சுயமரியாதையையும் கம்பீரமாக பறைசாற்றிய அந்தப் பெருங்கலைஞனின் மறைவு, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக மாறியிருக்கிறது.

திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் கண்ணீர்மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பாரதிராஜா மறைவுச் செய்தி கேட்டதில் இருந்து அந்த துக்க நிகழ்வில் முன் நின்று எல்லா வேலைகளையும் செய்பவராக சீமான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், சீமானுக்கும் இடையேயான உறவு என்பது வெறும் திரைத்துறை சார்ந்த நட்பு மட்டுமல்ல; அது கொள்கை ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பிணைக்கப்பட்ட ஒரு தந்தை-மகன் உறவு என்பதை தமிழகம் நன்கு அறியும். இலங்கைத் தமிழர் விவகாரம் முதல் தமிழ்நாட்டு உரிமைப் போராட்டங்கள் வரை, சீமான் முன்னெடுத்த பல மேடைகளில் பாரதிராஜா ஒரு வழிகாட்டியாக, ஆசானாக முன்னின்று கரம் கொடுத்தவர். அந்தப் பாசப் பிணைப்பின் வெளிப்பாடாகவே சீமான் செலுத்திய இறுதி அஞ்சலி அமைந்திருந்தது.

Seeman Pays Emotional Tribute to Bharathiraja Drapes Tiger Flag and Bids Final Farewell

கண்ணீர் மல்கிய இறுதி அஞ்சலி: மறைந்த இயக்குநர் இமயத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சீமான், பாரதிராஜாவின் முகத்தைப் பார்த்ததும் நிலைகுலைந்து போனார். தனது அரசியல் பயணத்திலும், தனிப்பட்ட வாழ்விலும் தார்மீக பலமாக நின்ற ஒரு மாபெரும் ஆளுமையின் இழப்பைத் தாங்க முடியாமல், அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து, உணர்ச்சிப் பெருக்குடன் அஞ்சலி செலுத்தினார்.

புலிக்கொடி போர்த்தி வீரவணக்கம்: தமிழ் தேசிய அரசியலின் மீது தீராப்பற்று கொண்டவராக விளங்கியவர் பாரதிராஜா. இலங்கைத் தமிழர் போராட்டக் களத்தில் ஆரம்ப காலம் முதலே முன் நின்றவர். அவரது இந்த கொள்கைப் பற்றையும், தமிழினத்திற்கான பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதிராஜாவின் பூதவுடலுக்கு 'புலிக்கொடி' போர்த்தி, முஷ்டி உயர்த்தி தனது வீரவணக்கத்தை மிக கம்பீரமாக செலுத்தினார்.

பாச முத்தமும் நெகிழ்ச்சிப் பகிர்வும்: கொடி போர்த்தி அஞ்சலி செலுத்திய பின்னர், உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பாரதிராஜாவின் உடலுக்கு பாசத்துடன் முத்தம் கொடுத்தார் சீமான். இந்த உருக்கமான தருணம் அங்கிருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சியைத் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சீமான், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Seeman Pays Emotional Tribute to Bharathiraja Drapes Tiger Flag and Bids Final Farewell

'எங்கள் அப்பா..' உருக்கமான பதிவு: தனது சமூக வலைத்தளப் பதிவில், "'இயக்குநர் இமயம்' எங்கள் அப்பா பாசத்திற்குரிய பாரதிராஜா அவர்களுக்கு வீரவணக்கம்!" என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். குருவாகவும், தந்தையாகவும் லட்சியப் பாதையில் தனக்குத் துணையாக நின்ற ஒரு பெருமகனுக்கு, ஒரு மகனின் கடமையாக இந்த இறுதி வணக்கத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, தமிழ் சமூகம் மற்றும் அரசியலுக்கும் பாரதிராஜா ஆற்றிய பணிகள் அசாத்தியமானவை. திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் தமிழினத்திற்காக ஓங்கி ஒலித்த அந்த சிங்கக் குரல், இன்று சீமான் போன்ற தம்பிகளின் நெஞ்சங்களில் 'வீரவணக்கமாக' என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X