Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.. பாலுமகேந்திரா நினைவு நாள்.. சீமான் அதிரடி பேச்சு!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாலுமகேந்திராவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், சீமான், அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் பல சுவாரஸ்ய விசயங்களை பேசியுள்ளனர்.
அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, மூடு பனி, வீடு, முள்ளும் மலரும், தலைமுறைகள் என பல படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலுமகேந்திரா.
1939ம் தேதி மே 20ம் தேதி பிறந்த பாலுமகேந்திரா, கடந்த 2014ம் ஆண்டு, பிப்ரவரி 13ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
பாலுமகேந்திராவின் நினைவுகளை அசைபோடும் விதமாக சென்னையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சீமான், அமீர் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் சுவாரஸ்யமான பல நினைவலைகளை அசை போட்டனர்.
பாலுமகேந்திராவுக்கு தமிழ்நாடு அரசு ஏன் வீடு கட்டி தரவில்லை என்ற கேள்வியை எழுப்பிய சீமான், தனது தலைவனுக்கு பிடித்த தமிழ் இயக்குநர் பாலுமகேந்திரா தான் என்ற விஷயத்தையும் போட்டு உடைத்தார்.
இயக்குநர் அமீருக்கும், பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, அமீரின் ராம் பட நிகழ்ச்சிக்கு பாலுமகேந்திரா கலந்து கொள்ளவில்லை என்ற தகவலையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பிரெஞ்சு படம் பார்க்கிறோம், பிரெஞ்சு நாகரீகம் தெரிகிறது. கொரிய படம் பார்க்கிறோம் கொரிய நாகரீகம் தெரிகிறது. ஆனால், தமிழ் படத்தை பார்க்கும் போது மட்டும் ஏன் தமிழ் நாகரீகம் தெரியவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சீமான், கலை, அரசியலை போற்றாத அரசு ஒரு போதும் வாழவே வாழாது என்றும், கலைத் துறையில் சாதிக்கும் கலைஞர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.