Don't Miss!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விஜய் சேதுபதி படத்துக்கு முன்பாக சீனு ராமசாமியின் புதிய படம் - அப்பா பாட்டு மகனுக்கு டைட்டில்!
சென்னை : சீனுராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா முரளி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு 'ஒரு ஜீவன்அழைத்தது' என்று பெயரிடப்பட்டுள்ளது.
'தர்மதுரை' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும், சீனு ராமசாமியும் இணையவிருந்தனர்.
இவர்கள் இணையும் புதிய படத்திற்கு 'மாமனிதன்' என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி அதிகமான படங்களில் நடித்து வருவதால் இந்தப் புதிய படத்தை தொடங்க காலதாமதம் ஏற்பட்டது.
அதற்கிடையே ஒரு படம் :
இதனையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி ‘மாமனிதன்' படத்துக்கு முன்னதாக அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் அதர்வா கல்லூரி மாணவனாக நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முரளி பாடல் டைட்டில் :
முரளி நடித்த படத்தில் வரும் 'ஒரு ஜீவன் அழைத்தது...' பாடலின் வரிகளை அவரது மகன் அதர்வாவின் படத்துக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். அதர்வா நடிப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டதா இல்லை டைட்டிலுக்காக அதர்வா தேர்வு செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.
கிராமத்துப் பின்னணி :
கிராமத்துப் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் கதையாம் இது. திருச்சியைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடக்குமென்றும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கதாநாயகி தேர்வு :
இந்தப் படத்துக்கு கதாநாயகி, மற்ற நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியை இயக்குவார் எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.