Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா - ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி : சீனு ராமசாமி வருத்தம்
சென்னை : திரைப்படங்களுக்கு 30% என்ற கேளிக்கை வரியை 10% ஆகக் குறைத்து வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த 10% கேளிக்கை வரி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி தியேட்டர் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
கேளிக்கை வரி விதிப்பால் அரசுக்கு எதிராகப் பொங்கும் திரைத்துறையினரையும், திரையரங்க உரிமையாளர்களையும் சமாதானம் செய்யும் பொருட்டு, தமிழக அரசு, டிக்கெட் விலையை 25% அதிகரித்துக்கொள்ள தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் டிக்கெட் கட்டணம் மேலும் உயரவிருக்கிறது. இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சினிமா டிக்கெட் விலை உயர்வால் சாமானிய மக்கள் சினிமா பார்க்கவே முடியாத நிலை நிலவுகிறது எனக் கூறியுள்ளார்.
தியேட்டர் கட்டணஉயர்வால்
— Seenu Ramasamy (@seenuramasamy) October 7, 2017
ஏழை
நடுத்தரமக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகிவிட்டது
இதனால்
நியாயமாக பார்க்கமுடியாத மக்களால் சினிமாத்தொழில் அழியநேரும்
'தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகிவிட்டது. இதனால் நியாயமாகப் பார்க்கமுடியாத மக்களால் சினிமாத் தொழில் அழியநேரும்' எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.