பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை: கொலையா?
புவனேஸ்வர்: ஒடிஷாவில் பிரபல நடிகை சிம்ரன் சிங் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் சிம்ரன் சிங். ரசிகர்கள் அவரை செல்ஃபி பெபோ என்று அழைப்பார்கள். சம்பல்புரி மொழி ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர் சிம்ரன். செல்ஃபி பெபோ, ரிக்ஷாவாலா, ரிம்ஜிம், மோர் கேர்ள்பிரெண்ட்- 2, தில் கா ராஸா, டிஜே பாபு ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட ஆல்பங்களில் அவர் தோன்றியுள்ளார்.

இந்நிலையில் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கொய்ரா மாதா அருகே இருக்கும் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் சிம்ரன் பிணமாகக் கிடந்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிம்ரனின் தலை மற்றும் முகம் முழுக்க காயங்களாக இருந்தது. அவரின் உடலுக்கு அருகே ஒரு பை கிடந்தது.
இதற்கிடையே சிம்ரனை அவரின் கணவர் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











