Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செல்ஃபி பற்றி சிவகுமாரை கலாய்த்த கஸ்தூரி: லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய கார்த்தி
Recommended Video
சென்னை: ஜூலை காற்றில் பட விழாவில் சிவகுமாரை கலாய்த்த கஸ்தூரியால் கார்த்தி கோபம் அடைந்தார்.
கே.சி. சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜூலை காற்றில். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அது சரி, இதுக்கு என்ன செய்யப் போறீங்க உதயநிதி?: அடுத்த பஞ்சாயத்து ரெடி
செல்ஃபி
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கஸ்தூரி கார்த்தியை அழைத்து உங்க அப்பா இல்லை, அதனால் அவசரமாக ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்றார். கார்த்தி சிரித்தபடி இது ரொம்ப தேவையில்லாதது என்று செல்ஃபிக்கு போஸ் கொடுக்காமல் மைக் அருகே சென்றுவிட்டார்.
கார்த்தி
ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டதுல்ல இந்த செல்ஃபி என்கிற விஷயத்திற்கு. யாருக்கும் மரியாதையே கிடையாது. கேட்டு போட்டோ எடுக்கணும் என்பது இல்லை. மூஞ்சிக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவது. அந்த பிளாஷ் வேற பின்னாடி ஒன்று, முன்னாடி ஒன்று. அவ்வளவு பிளாஷ் கண்ணில் பட்டால் மைக்ரேன் இருக்கிறவன் என்னாவான். ஒரு விவஸ்தையே கிடையாது என்று நினைக்கிறேன். மரியாதையாக கேட்டுவிட்டு போட்டோ எடுக்க வேண்டும் என்று தெரியாத அளவுக்கு நாம் ஆகிவிட்டோம் என்று வருத்தமாக உள்ளது என்றார் கார்த்தி.
|
கிண்டல்
ஜூலை காற்றில் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை வைத்து கஸ்தூரியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
செல்போன்
அனுமதி கேட்காமல் செல்ஃபி எடுத்த இரண்டு பேரின் செல்போன்களை தட்டிவிட்டார் சிவகுமார். அதே சமயம் அனுமதி கேட்டவர்களுக்கு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.