Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'செல்லாக்காசு' - வெற்றிபெற்ற குறும்படங்களுக்கு விருது வழங்கும் விழா!
Recommended Video
சென்னை : கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 500,1000 ரூபாய் செல்லாது என அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பால் ஒரே இரவில் மக்கள் கையிலிருந்த பணம் அனைத்தும் செல்லாக்காசாக மாறிப்போனது. இந்த நாட்களில் மக்கள் எதிர்கொண்ட சூழல்களையும், அனுபவங்களையும், குறும்படங்களாக எடுக்கும் போட்டி கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 2017-ல் "இளந்தமிழகம் திரை" சார்பாக அறிவிக்கப்பட்ட 'செல்லாக்காசு' குறும்படப் போட்டியில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த படைப்பாளிகளின் 40-க்கும் அதிகமான குறும்படங்கள் கலந்து கொண்டன.
திரைப்பட இயக்குநர்கள் திரு. ராம், திரு. கமலக்கண்ணன், திரு. மீரா கதிரவன், திரு. 'நிழல்' திருநாவுக்கரசு அவர்கள் அடங்கிய நடுவர் குழுவின் தேர்வுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ள குறும்படங்களுக்கு விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
சிறந்த படம் என்கிற பிரிவில் மூன்று விருதுகளும், சிறந்த நடிகர் நடிகை, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குறும்படங்களை எடுத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை கிறித்துவக் கல்லூரியின் இதழியல் துறை மற்றும் இளந்தமிழகம் இயக்கம் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவை நடத்துகின்றன.