Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பொன்னியின் செல்வன் - இப்போ செல்வராகவன் முறை!!
அமரர் எம்ஜிஆர் இந்தப் படத்தை எடுக்க முயற்சித்தார். அதற்கு இயக்குநர் மகேந்திரனை வைத்து முழுமையாக திரைக்கதை வசனத்தைக் கூட எழுதிவிட்டார்.
ஆனால் அவர் அந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தபோது, அரசியலில் மகா பரபரப்பாகிவிட்டார். படம் நின்றது.
பின்னர் கமல்ஹாஸன் முயற்சி செய்வதாகக் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இயக்குநர் மணிரத்னம் இந்த நாவலைக் கையிலெடுத்தார். விஜய், விக்ரம், ஆர்யா, மகேஷ்பாபு என பலர் நடிப்பதாகக் கூறப்பட்டது. மைசூர் லலிதமகாலில் ஷூட்டிங் நடத்த தேதியெல்லாம் குறித்த நிலையில், படத்தைக் கைவிட்டார் மணிரத்னம்.
இந்த நிலையில், அடுத்து செல்வராகவன் இந்தப் படத்தை எடுக்க ஆர்வமாக உள்ளதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு, விக்ரம், ஆர்யா மற்றும் ஜீவா போன்றோரை வைத்து இந்தப் படத்தை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
'இராஜ இராஜ சோழனாக' விக்ரமும், 'ஆதித்த கரிகாலனாக' ஆர்யாவும், 'வல்லவரையன் வந்திய தேவனாக' ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
நடக்குமா... அல்லது வேறு இயக்குநர் முதலிலிருந்து ஆரம்பிப்பாரா? பார்க்கலாம்!