Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ்: சூர்யா ரசிகர்களுக்கு செல்வராகவன் வேண்டுகோள்
சென்னை: கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள் என்று இயக்குனர் செல்வராகவன் சூர்யா ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சாதாரணமாக செல்வா படம் என்றாலே ரிலீஸ் தேதியை காலண்டரில் ஆணி அடித்து வைத்து காத்திருந்து முதல் காட்சியைப் பார்ப்பவர்கள், சூர்யா நடிக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் என்.ஜே.கே. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், வெளியாகாது என அறிவித்துவிட்டனர். தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அது ஒன்றும் பட்டாசு இல்லை என சூர்யாவும் சொல்லிவிட்டார்.
மேலும் 20 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் பலர் தங்களுடைய தலைமைப் பண்பை நிரூபிக்கின்றனர். நான் 70 களின் பிறந்தவன். இப்போதுள்ள ரசிகர்களை திருப்திபடுத்த கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என படம் தள்ளிப்போவதற்கான காரணத்தைச் சொன்னார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள இயக்குனர் செல்வராகவன், ரசிகர்களே உங்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். ஒரு அப்டேட் கொடுக்க வேண்டுமென்றாலும், நிறைய நாட்கள் அல்லது வாரங்கள் கவனமாகவும், எனர்ஜியுடனும் கடுமையாக உழைக்க வேண்டும். சும்மா போகிற போக்கில் ஒரு அப்டேட் கொடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். சரியான நேரம் வரும் என பதிவிட்டுள்ளார்.
Humble request to fans.We have tremendous respect for you,but please remember that for one update we have to work so many days or weeks with all our focus and energy. I don't believe giving you an update just for the sake of it.We are all working hard and time will come soon.🤗💪
— selvaraghavan (@selvaraghavan) September 10, 2018
அப்டேட் கொடுங்கள் என செல்வராகவனை ரசிகர்கள் தொல்லை செய்வதால் வேறு வழி இல்லாமல் இப்படி ட்வீட் செய்துள்ளார்.