Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தடைகளை தாண்டி உறுதியானது நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி!
சென்னை: S. J. சூரியா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் பல நாட்களாக வெய்டிங்-ல் உள்ள படம்
"நெஞ்சம் மறப்பதில்லை".
இந்த படத்தை செல்வராகவன் திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். Escape Artists நிறுவனம் தயாரித்துள்ளது.
குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
இந்த படத்தை படக்குழு மார்ச் 5ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.
பாடலுக்கு வரவேற்பு
ஏற்கனவே படத்தின் 4 ட்ரைலர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Psychological Thriller கதைகளத்தை கொண்ட படமென்பதால் 4 ட்ரைலர்களும் பார்க்கும் போதெல்லாம் எதிர்பார்ப்பை கிளப்பி கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி யுவனின் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்களை மெருக்கேற்றியது
இதைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்து மார்ச் 5 என அறிவித்தது. மேலும் ரசிகர்களுக்காக 2 நாட்களுக்கு முன் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டது. ஸ்னீக் பீக் காட்சியில்
S.J. சூர்யாவின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், வசனங்கள் ரசிகர்களை மீண்டும் மெருக்கேற்றியது.
ரசிகர்கள் சோகம்
பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்தை தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மறுபடியும் முதலில் இருந்தா என ரசிகர்கள் மத்தியில் சோகம் நிலவியது.
டபுள் ட்ரீட்
இந்த முறை இழுத்தடிக்காமல் படக்குழு கடன் தொகையை உடனே திருப்பி வழங்கி படத்தினை காப்பற்றியுள்ளது. முன்னர் அறிவித்தது போல நெஞ்சம் மறப்பதில்லை மார்ச் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. அன்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீடாக அமைந்துள்ளது.