அட இது நம்ம சிங்கார சென்னை தானா?: வியக்க வைத்த செல்வராகவன்
சென்னை: மழை நாளில் எடுத்த சென்னையின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையில் மழை பெய்து வருகிறது. வெயில் கொளுத்திய சென்னையில் தற்போது மழையின் ஆசிர்வாதம் அடிக்கடி கிடைக்கிறது.
காலையில் எழுந்த உடன் மக்கள் மழையின் முகத்தில் விழிக்கிறார்கள்.
மழை
இப்பொழுதெல்லாம் மழை நமக்கு காலை வணக்கம் சொல்கின்றது. 🌧🌦🌦🌦🌧🌧⛈🌧 என்று மழை பற்றி ட்வீட்டியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
வாவ்
மழை நாளில் சென்னையை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அந்த புகைப்படம் பார்ப்பவர்களை ஈர்த்து வருகிறது.

கேமரா
சென்னையின் புகைப்படமா இல்லை ஓவியமா என்று வியக்கும்படி உள்ளது செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம். அவரின் திறமையை பார்த்து ரசிகர்கள் வியக்கிறார்கள்.

வேண்டும்
இயற்கையை ரசிக்க உங்களின் கண்கள் வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். புகைப்படத்தை பார்த்தவர்கள் செல்வராகவனை ஜீனியஸ் என பாராட்டுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











