Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செல்வராகவன் கதையை இயக்கும் மனைவி கீதாஞ்சலி
செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' கதையினை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தற்போது இயக்கி வருகிறார்.
ஆர்யா, அனுஷ்கா நடிக்க, செல்வராகவன் இயக்கத்தின் வெளியான படம் 'இரண்டாம் உலகம்'. அப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததோடு வியாபார ரீதியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.
அப்படத்தை தயாரித்த பி.வி.பி சினிமாஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவன் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஆனால் அவரது அழகான கதையினை அவரது மனைவி இயக்கிவருகிறார்.
கணவரிடம் உதவி இயக்குநர்
செல்வராகவனிடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கீதாஞ்சலி செல்வராகவன். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் முதல் படம் 'மாலை நேரத்து மயக்கம்' என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
மாலை நேரத்து மயக்கம்
அதே சமயம் மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
கணவருக்கு நன்றி
தான் இயக்குநரானது குறித்து கீதாஞ்சலி செல்வராகவன், "செல்வராகவன் கொடுத்த அழகான கதைக்கு இச்சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வாழ்த்துகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகளுடன் செல்வா
நான் இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். ஆனால், அவர் சிறிது காலத்திற்கு குழந்தைகளோடு நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறார்.
ஒரு ரசிகையின் கோரிக்கை
மனைவியாக இல்லாமல் ஒரு ரசிகையாக, செல்வராகவன் தனது மனநிலையை மாற்றி விரைவில் அதிரடியாக படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கீதாஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.