Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
படத்த கூர்ந்து கவனிச்சா ‘அந்த’ ரகசியம் தெரியும்.. என்.ஜி.கே. பற்றி செல்வராகவன் டிவீட்!
என்ஜிகே படத்தை கூர்ந்து கவனித்து பார்க்க வேண்டும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: என்ஜிகே படத்தை கூர்ந்து கவனித்தால், அதில் இருக்கும் ரகசியங்கள் புரியும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவான என்ஜிகே படம் நேற்று வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது.
விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலித்துள்ளது.
என்ஜிகே படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவருடைய கதாபாத்திரத்தில் நிறைய மர்மங்கள் இருப்பதாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர்.
Thanks for the overwhelmimg support & love for #NGK Grateful.The love have shown is truly remarkable. And as some you guessed, the character of #NGK has lot of hidden layers & secrets. It's easy to find when you watch the film closely. Enjoy the film with family and friends!
— selvaraghavan (@selvaraghavan) 1 June 2019
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் செல்வராகவன் ஒரு டிவீட் செய்துள்ளார். அதில், "என்ஜிகே படத்திற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த உண்மையான அன்பு மிகவும் மதிக்கத்தக்கது. என்ஜிகே கதாபாத்திரத்தில் நிறைய மர்மங்கள் இருப்பதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். படத்தை கூர்ந்து கவனித்தால் அதனை எளிதாக புரிந்து கொள்ள முடியும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் படத்தை பார்த்து மகிழுங்கள்", என அவர் தெரிவித்துள்ளார்.
என்ஜிகே படத்தில் பட்டதாரியான சூர்யா, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு, பின்னர் அரசியலில் கால் பதிப்பார். ஒரு சாதாரண அடிமட்ட தொண்டனாக அரசியல் வாழ்வை தொடங்கி, மாநிலத்தின் முதலமைச்சராக அவர் எப்படி உயர்கிறார் என்பதே படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.